Drawing courtesy : KBS Saranya
நீ
பள்ளிக்கு வரும்போது
கவனிப்பதில்லையா?
உன்னைத் தொடர்ந்து வரும்
பட்டாம் பூச்சிகளையும்
வானவில்லையும்!
.
புத்தகத்திற்குள்
மயிலிறகை வைத்துக்கொண்டு
குட்டி போடும் என்றெண்ணி
குட்டி போடும் என்றெண்ணி
காத்துக்கிடக்கிறாய்!
உன் உதிர்ந்த கூந்தலே
மயிலிறகாகிப் போனதென்று
பிதற்றிக்கொண்டிருக்கிறேன்
நான்!
.
.
"பாடம் புரியவில்லையா?"
எனக் கேட்டு உதடு பிதுக்குகிறாய்
"இதே வகுப்பில்
நீ உள்ள வரை
எந்தப் பாடமும் எனக்கு
புரியப்போவதில்லை"என்பதை
என்று நீ உணரப் போகிறாய்?
.
.
இயற்பியல்,
வேதியியல்,
உயிரியலோடு,
காதலியலும்
கற்றுத்தரப் படுகிறது
நீ உள்ள வகுப்பறையில்!
.
.
நீ
தமிழ்த்தாய் வாழ்த்து
பாடுவதால்தான்
பள்ளியே தொடங்குகிறது
என்றென்னும்
பைத்தியக்கரனாகி விட்டேன் நான்!
.
.
ஹெர்பேரியத்திற்காகப் பூக்கள்
ஓட்டச் சொன்னால்
உன் கண்களையும்
இதழ்களையும் வரைந்து வைத்து விட்டு,
ஆம்பல், மௌவல் என
உளறிக்கொண்டிருக்கிறேன்
நான்!
.
சத்தியமாக சொல்கிறேன்!
மலர் வரைபடம்
வரையும் போதெல்லாம்
உன்னைத்தான் எண்ணிக்
கொண்டிருக்கிறேன்!