Archive for March 2012

கஜல் காதல் - பள்ளிக்கூடம்!

Mar
2012
20

on

No comments

Drawing courtesy : KBS Saranya

நீ
பள்ளிக்கு வரும்போது 
கவனிப்பதில்லையா?
உன்னைத் தொடர்ந்து வரும்
பட்டாம் பூச்சிகளையும்
வானவில்லையும்!
.

புத்தகத்திற்குள் 
மயிலிறகை வைத்துக்கொண்டு
குட்டி போடும் என்றெண்ணி  
காத்துக்கிடக்கிறாய்!
உன் உதிர்ந்த கூந்தலே 
மயிலிறகாகிப் போனதென்று 
பிதற்றிக்கொண்டிருக்கிறேன் 
நான்!
.
.
"பாடம் புரியவில்லையா?"
எனக் கேட்டு உதடு பிதுக்குகிறாய்
"இதே வகுப்பில் 
நீ உள்ள வரை
எந்தப் பாடமும் எனக்கு 
புரியப்போவதில்லை"என்பதை 
என்று நீ உணரப் போகிறாய்?
.
.
இயற்பியல்
வேதியியல்,
உயிரியலோடு,
காதலியலும்
கற்றுத்தரப் படுகிறது
நீ உள்ள வகுப்பறையில்!
.
.
நீ 
தமிழ்த்தாய் வாழ்த்து 
பாடுவதால்தான்
பள்ளியே தொடங்குகிறது 
என்றென்னும் 
பைத்தியக்கரனாகி விட்டேன் நான்!
.
.
ஹெர்பேரியத்திற்காகப் பூக்கள் 
ஓட்டச் சொன்னால் 
உன் கண்களையும் 
இதழ்களையும் வரைந்து வைத்து விட்டு,
ஆம்பல், மௌவல் என
உளறிக்கொண்டிருக்கிறேன் 
நான்!



.
சத்தியமாக சொல்கிறேன்!
மலர் வரைபடம் 
வரையும் போதெல்லாம் 
உன்னைத்தான் எண்ணிக் 
கொண்டிருக்கிறேன்!