"அப்பா! இன்னும் ஸ்பீடா போப்பா! இன்னும் ஸ்பீடா.. இன்னும் இன்னும்...!" இப்படித்தான் வழக்கமாகக் கூவிக் கொண்டே வருவான் சின்ன ராசு, காலையில் கடை திறக்க அப்பாவுடன் சைக்கிளில் வரும்போதும் மாலையில் கடை மூடிவிட்டு வீடு திரும்பும் போதும்
.
"என்னப்பா ! இவ்வளவு ஸ்பீடுதான் போவியா? நான் பெரியவனாகி எவ்வளவு ஸ்பீடா ஓட்டப் போறேன் பாரு" என்று சமயங்களில் சவால் வேறு விடுவான் அப்பாவுக்கு
.
.
"என்னப்பா ! இவ்வளவு ஸ்பீடுதான் போவியா? நான் பெரியவனாகி எவ்வளவு ஸ்பீடா ஓட்டப் போறேன் பாரு" என்று சமயங்களில் சவால் வேறு விடுவான் அப்பாவுக்கு
.
சைக்கிள் வாங்கி கொஞ்ச நாள்தான் ஆகியிருந்தது. கூடப் படிக்கும் பிள்ளைகள் வீட்டில் வண்டி இருப்பதாகவும் தன வீட்டில் வண்டி இல்லாவிடினும் ஒரு சைக்கிளேனும் வாங்குமாறு அப்பாவை நச்சரித்து ஒரு வழியாக சைக்கிளும் வாங்கியாயிற்று.
சைக்கிள் வாங்கியபின் அந்த தெருவிற்கே ராஜாவாகத் தன்னை உணர ஆரம்பித்தான் சின்ன ராசு.
பக்கத்து வீட்டுப் பிள்ளைகளிடம் தன் சைக்கிளைக் காண்பித்து பெருமை பேசுவதும், சைக்கிளை மெதுவாகத் தெரு முனை வற்றை தள்ளிக்கொண்டே போய் மற்ற பிள்ளைகளை ஏளனமாகப் பார்ப்பதும், தன்னை விட வயது மூத்தப் பிள்ளைகள் சைக்கிளில் ஒரு ரவுண்டு கேட்டாலும் கொடுக்காமல் போவதுமாக அவனது செய்கைகள் அவனுக்கு சைக்கிள் மீதிருந்த அபரிமிதமான ஆசையை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தன.
சைக்கிளைத் தூசிதுடைப்பது, கழுவி விடுவது, சிறிசிறு மலர்கள் கொண்டு அதனை அலங்கரிப்பது என எப்போதும் சைக்கிளுடனேயே தன் நாட்களை கழிக்கத் தொடங்கினான். முன்பை விட தற்போது அவனுடைய நாட்கள் மிகவும் நீளமானதாகவும் சுறு சுறுப்பாகவும் ஆகிவிட்டன.
காலையில் கூட அப்பா எழும்போதே எழுந்து விடுகிறான். அப்பாவுடன் சைக்கிளில் கூட செல்ல வேண்டும் என்பதற்காகவே கடை திறக்க தினமும் தானும் உடன் வருவதாக ஒப்பந்தம் செய்து கொண்டான். ஒவ்வொரு கணமும் சைக்கிளைப் பற்றி ஏதேனும் யோசித்துக்கொண்டே அவனது பயணங்கள் தொடர்ந்தன.